முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஆளும் தரப்புக்கு அட்வைஸ்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஆளும் தரப்புக்கு அட்வைஸ்


காலத்திற்கு காலம் அரசாங்கங்கள் மாறினாலும், நிலையான தேசிய கொள்கையொன்றை உருவாக்கிக்கொள்ளும் இணைக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய வேளையில் அவர் இதனை கூறினார்.

அமைச்சுப் பதவி மாறினாலே கொள்கையை மாற்றிக்கொள்ளும் நிலை இனியும் தொடரக்கூடாது என அவர் சபையில் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post