சலிப் பிரச்சினையை மருத்துவ சிகிச்சைகளின்றி ஏழு நாட்களில் தானாக குணமாக்கலாம்

சலிப் பிரச்சினையை மருத்துவ சிகிச்சைகளின்றி ஏழு நாட்களில் தானாக குணமாக்கலாம்

கொரோனா நெருக்கடி காலத்தில் ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே முயற்சிக்கின்றனர். இதற்கான ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, தூக்கம் என ஆரோக்கியாமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுகின்றனர். இருப்பினும் பருவநிலை மாற்றம், தொற்று போன்ற காரணங்களால் சளி உருவாகலாம். எனவே உங்களுக்கு சாதாரண சளிதான் பிடித்துள்ளது எனில் அது மாத்திரை, மருத்துவ சிகிச்சைகளின்றி ஏழு நாட்களில் தானாக குணமாகிவிடும் என டைம்ஸ் ஆஃப் இந்திய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது, எனவே உங்களுக்கு சாதாரண சளிதான் எனில் அதை குணமாக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.

இஞ்சி டீ : இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைத்த வரம். சளிக்கு அதிமருந்தாக செயல்படும். எனவே இஞ்சியை தண்ணீரில் தட்டிப்போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வாருங்கள். சளிக்கு தொண்டை வலிக்கு இதமாக இருக்கும்.

நீரேற்றம் : சளி இருக்கும்போது உடல் சூடாகும். இதனால் உடலின் நீர் வற்றிப்போகும். இதனை தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்கலாம். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை , தேன் கலந்து குடிக்கலாம். டீ, காஃபியை தவிர்க்கலாம்.

ஆவி பிடித்தல் : யூக்கலிப்டஸ் இலைகள் அல்லது டீ ட்ரீ எண்ணெய்யை சூடான நீரில் கலந்து ஆவி பிடிக்கலாம். இதனால் சளி குறையும். மூக்கடைப்பு சரியாகும்.

வாய் கொப்பளித்தல் : வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்கலாம். இதை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என செய்து வர சளி குறையும்.

விட்டமின் சி : விட்டமின் சி தொற்று வைரஸுகளுடன் போராட உதவும். எனவே எலுமிச்சை தண்ணீர், ஆரஞ்சு, திராட்சை போன்ற விட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுங்கள். இஞ்சி டீயுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்கலாம்.


Post a Comment

Previous Post Next Post