சமாதன நீதவானாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாப் ஷிபான் அவர்களைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு

சமாதன நீதவானாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாப் ஷிபான் அவர்களைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு


கல்ஹின்னை பள்ளியகொட்டுவ கிராமபிரிவுக்கு உட்பட்ட ஜனாப் ஷிபான் ஹனிபா 186/1A, கட்டாபுவ வீதி கல்ஹின்னை, முகவரியில் வசிக்கும் இவர் கடந்த  13-10-2021,யில் சமாதன நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். 25-03-2022 கண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்திபிரமானம் செய்து ஏற்றுக்கொண்டார்.

நீண்டகாலமாகவே சமூகப்பணியில் மிக அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர் கடந்த கொரோனா காலகட்டத்தில் தான் இருக்கும் பிரதேசத்தில் மாத்திரமின்றி கல்ஹின்னையை அன்றி இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களில் கொரோனாவினால் பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தார்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்தார்.

 குறிப்பாக: ஜனாப் ஷிபான் அவர்கள்,  கல்ஹின்னையில் 50,ஆண்டுகளுக்கு மேல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான அல்-ஹாஜ் மூஸா ஹனிபா நானா என்றழைக்கப்படும் அவர்களின் இரண்டாவது மகன் ஆவர்.

ஜனாப் ஷிபான் அவர்களின் தந்தையும் எமதூருக்கு அளப்பெரும் சேவைகளை செய்துள்ளார், பாடசாலைகளின் ஆசிரியர்கள் நியமனம், போக்குவரத்து பாதைகள் அபிவிருத்தி, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தார்களின் அத்தியாவசிய தேவையான விடயங்களை கேட்டறிந்தும், ஊரின் முன்னேற்றத்காகவும் முழுமூச்சாக செயல்பட்டவர்.

அதே வழியில்தான் அவர் மகன் ஜனாப் ஷிபான் அவர்களும் இன்று நம்மத்தியில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவரின் சமூகப்பணி தொடர ஒத்துழைப்பு வழங்குவோம்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post