கத்தாரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பட்டையைக் கிளப்பும் முஹம்மத் ரஸ்மி ஹபீல்......யார் இவர்? -VIDEO

கத்தாரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பட்டையைக் கிளப்பும் முஹம்மத் ரஸ்மி ஹபீல்......யார் இவர்? -VIDEO

கல்ஹின்னையை பொறுத்தவரையில் அன்றும் இன்றும் கிரிக்கெட் விளையாட்டைத்தான் மக்கள் கூடுதலாக ரசிப்பார்கள் .சிறுவர் முதல் பெரியவர்கள் வரையிலும் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதிலும் ,விளையாடுவதிலும் அதிக ஆர்வம் செலுத்துவார்கள்.இது பரம்பரை பரம்பரையாக தொடர்கின்ற கதை.

கிரிக்கெட் விளையாடுவதற்கு கல்ஹின்னையில் மிகப் பெரிய மைதானமோ அல்லது வசதி வாய்ப்புக்களோ இல்லையென்றாலும் , இருக்கின்ற மிகக் குறைவான வசதிகளை  வைத்துக்கொண்டு மிகப் பெரும் சாதனைகள் செய்ய முயற்சிக்கின்றவர்கள் கல்ஹின்னை இளைஞர்கள்..

திறமையை வளர்த்துக்கொள்ள ஒரு சிறு இடைவெளி கிடைத்தாலும் போதும் .அதை பக்குவமாய் நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கிணங்க கல்ஹின்னை இளைஞர்கள் அன்றும் இன்றும் அயராது போராடிகொண்டிருப்பவர்கள். .

அப்படி வளர்ந்தவர்தான் முஹம்மது ரஸ்மி ஹபீல் .

மத்திய மாகாணத்தில், ஹாரிஸ்பத்துவ தொகுதியில், கல்ஹின்னை கிராமத்தில், பள்ளியகொட்டுவ தொகுதியில், மூசாமுனை என்றழைக்கப்படும் பகுதியில் மர்ஹும் மஜீத் லெப்பை அவர்களின் குடும்ப வாரிசு .

மர்ஹும் மஜீத் லெப்பை  அவர்களின் ஆண் வாரிசுகளில் மூத்தவரான ஹபீல் மஜீத் அவர்களின் இரண்டாவது மகன்தான் முஹம்மத் ரஸ்மி ஹபீல் அவர்கள், 

இவர் ஆரம்பக் கல்வியை தற்போதைய கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில் கற்றார்.



பள்ளியில் படிகின்ற காலங்களில்கூட இவரின் முழுமையான ஆர்வம் படிப்பதை விடவும் விளையாட்டின் பக்கமே  இருந்தது.

சாதாரணதரப் பரிட்சை நடக்கின்ற காலகட்டத்திலும்   முஹம்மத் ரஸ்மி ஹபீல், கிரிக்கெட் விளையாட்டின்மீதுதான் அதிக ஆர்வமாக  ஈடுபடுவார்.

அவருடைய முழு சிந்தனையும் கிரிக்கெட் மீதுதான் இருந்தது என்று அவருடைய தந்தை கூறக் கேட்டிருக்கின்றேன்,

 முஹம்மத் ரஸ்மி ஹபீல்  அவர்கள் தன்னுடைய 15,ம் வயதிலேயே மென்பந்து(softball) கிரிக்கெட் விளையாட்டுக்காண பயிற்சியை அவரின் வீட்டின் முற்றத்தில், மற்றும் வீதியிலும் விளையாடிக் கொண்டிருப்பதை நானும்கூட பல தடவைகள் கண்டுள்ளேன். பொதுவாக கல்ஹின்னை இளைஞர்கள் அப்படித்தான் விளையாடுவார்கள்..அது இன்றும் ஒருசில இடங்களில் நடக்கின்றது .

முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் என்பார்கள் அல்லவா அதற்கு முஹம்மத் ரஷ்மி பொருத்தமானவர்  ஆவார்.   அல்ஹம்துலில்லாஹ்
.
ரஸ்மி அவர்கள் முதன் முதலாக கல்ஹின்னையில் YOUNG STAR அணியில் விளைடினார்.அவருடைய திறமையை  வளர்த்துக்கொள்ள மிகவும் உறுதுணையாக இருந்தது YOUNG STAR அணி .
அதன்மூலம் கல்ஹின்னையில் மிகவும் பிரபலமான ஒரு கிரிக்கெட் வீரராக உருவெடுத்தார். 

தொழில் நிமித்தமாக கத்தாருக்கு சென்றாலும் தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல், கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவதில் ஈடுபட்டார்.

ஒவ்வொரு போட்டியிலும் மிகத்திறமையாக விளையாடி கத்தாரில் இருக்கினற பிரபலமான கிரிக்கெட் கிளப்புகளின் கவனத்தை ஈர்த்தார். 

 அதன் மூலம் முதன் முதலில் கத்தார் சிவகிட் அணியில் விளையாடும் வாய்ப்புக்  .கிடைத்தது. அந்த வாய்ப்பையும் தவறவிடாமல் கடுமையான பயிற்ச்சியில் ஈடுபட்டு சிவகிட் அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மிளிர்ந்தார். பின்பு கத்தார் பிரீமியர் டிவிஷன் ,மற்றும் கத்தார் Aடிவிஷன் போன்ற அணிகளுக்காக விளையாடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்தனக்கு சாதகமாக்கிக்கொள்ள கடுமையாக உழைத்தார். 

கடக்கும் ஒவ்வொரு படிகளிலும் வெற்றியின் முத்திரை பதித்தார்.அதன் மூலம் கத்தாரில் நடக்கின்ற பிரபலமான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக்கள் தேடி வந்தன.


தற்போது ரெட்கோ இன்டர் நஷனல்அணிக்காக விளையாடும் ரஸ்மி ஹபீல் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி நடந்த ஒரு சுற்றுப்போட்டியில் கத்தார் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் செய்யாத ஒரு சாதனையை செய்தார்.கடந்த மாதம் கத்தாரில் நடந்த T20 சுற்றுப் போட்டியில்.75 பந்துகளில் 211ஓட்டங்கள்(ஆட்டமிழக்காமல்) எடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.இந்த சாதனையை எந்த ஒரு கத்தார் வீரரும் சாதிக்கவில்லை.எதிர்வரும் காலங்களில் இந்த சாதனை முரியடிக்கப்படுமா என்பதும் சந்தேகமே.

கத்தாரில் நடக்கின்ற அனைத்து சுற்றுப்போட்டிகளிலும் மிக அற்புதமாக விளையாடிய ரஸ்மி அவர்களுக்கு கத்தார் தேசிய அணியில் விளையாட சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு .தற்போது கத்தார் தேசிய அணியின் பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெரும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தேசிய அணியின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற கிரிக்கெட் வீரர்களுக்கு இலகுவாகக்  கிடைப்பதில்லை.ரஸ்மி ஹபீளின் சாதனைகள் மூலம் கிடைத்த வாய்ப்பு. .அது ரஸ்மி அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

இனி அடுத்த கட்டம் தேசிய அணியில் விளையாடுவது.


ஒவ்வொரு படிகளைத் தாண்டும்போதும் ஆழமான முத்திரை பதிக்கும் ரஸ்மி ஹபீளின் கனவு நிறைவேற வேண்டும்.

நிச்சயமாக அவருடைய கடின உழைப்பு அவருக்குக் கை கொடுக்கும்.

கல்ஹின்னையில் பிறந்து வளர்ந்த ஒரு ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரரின் கனவு நிறைவேற கல்ஹின்னை மக்கள் அனைவரும் பிராத்திப்போம் ,,,வாழ்த்துவோம் .

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.




Post a Comment

Previous Post Next Post