கல்ஹின்னை YMMA யின் ஏற்பாட்டில், மூன்றாவது முறையாகவும் இரத்த தான முகாம்

கல்ஹின்னை YMMA யின் ஏற்பாட்டில், மூன்றாவது முறையாகவும் இரத்த தான முகாம்


தேசத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சகலரது பங்களிப்பையும் நாடி அகில இலங்கை YMMA பேரவையின் வழிகாட்டலின் கீழ் YMMA Galhinna அமைப்பின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக கல்ஹின்னையில் ஏற்பாடு செய்யப்படும் 
மாபெரும் இரத்த தான முகாம்
இன்ஷா அல்லாஹ் 

இம்மாதம்  29 ஆம் திகதி *ஞாயிற்றுக்கிழமை 
காலை 8.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை *
கல்ஹின்னை ஆரம்ப பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

“விலை மதிக்க முடியாத உயிரைப் பாதுகாக்க 
விலை மதிக்க முடியாத உங்கள் இரத்தத்தை வழங்குங்கள்.”

இரத்த தானம் செய்யும் ஒவ்வொருவருக்கும் பெறுமதியான சான்றிதழ் மற்றும் GWA-UK இன் அனுசரணையில் குடையொன்றும் இன்ஷா அல்லாஹ் வழங்கப்படும். 
உதிரம் கொடுப்போம்!  உயிர் காப்போம்! 

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 

அல்லாஹ் நம் அனைவரது முயற்சிகளையும் ஏற்று மேலான அருள் புரிவானாக!  ஆமீன். 

செயலாளர்.
YMMA Galhinna
27.09.2024

 


 


Post a Comment

Previous Post Next Post