ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி சந்தேகநபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

டயகம சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் 23ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

ரிஷாட் வீட்டில் மற்றுமொரு பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதற்கு காரணமானவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர்கள் அனைவரையும் 48 மணிநேரம் தடுப்புக்காவலில் விசாரிக்குமாறு நீதிமன்றம் 24ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த வகையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post