உலகில் மனிதனுக்கு எது சொந்தம் ?

உலகில் மனிதனுக்கு எது சொந்தம் ?

மனிதன் 24 மணிநேரமும் உழைக்க ஆசைப்படுகிறான். அவனது உடல் அதற்கு ஒத்துழைக்காது என்ற போதிலும் அவன் தனது வாழ் வின் பெரும் பகுதியினை உலகச் செல்வங் களைத் திரட்டுவதற்காகவே செலவிடுகிறான் . 

அதனால் அவன் உடல் சோர்வும் , மனச்சோர் வும் அடைந்து தனது ஆரோக்கியத்தை இழந்து நோயாளியாகி விடுகிறான்.நினைத்த உணவை கூட உண்ண முடியாத நிலைக்கு அவன் ஆளாகி சராசரி மனித வாழ்வைக்கூட இழந்து தவிக்கின்றான் . 
குதிரை இருந்தால் தான் சாட்டை தேவை . ஆனால் மனிதனோ குதிரையை விற்று சாட்டையை வாங்க முயல்கின்றான் . ஆரோக் கியத்தை இழந்து விட்ட பின்பு செல்வத்தினால் என்ன பலன் ? 

இந்த உலகம் என்பது ஒரு மாயத்தோற்றமே . அது நம்முடன் இருப்பதைப் போன்று காட்டிக் கொள்கிறது . ஆனால் உரிய காலம் வரும்போது அது நம்மை மண்ணில் புரட்டிப் போட்டுவிடும் . 

உலகில் மனிதனுக்கு உண்மையில் எதுவெல்லாம் சொந்தம் என்பதை நபிகளார் ( ஸல் ) இவ்வாறு கூறு கிறார்கள் : 
1 ) அவன் உண்டு ருசித்து செரித்து கழித்த உணவு , 
2 ) அவன் உடுத்தி மகிழ்ந்து கிழித்துவிட்ட ஆடை , 
3 ) அவன் செய்த நல்ல - கெட்ட செயல்கள் . இந்த மூன்றும் தான் மனிதனுக்கு சொந்தமானது என்கிறார்கள் நபிகளார் ( ஸல் ) . 

உங்களுக்குச் சொந்தமான இம்மூன்றிலும் மற்றவர் எவரும் உங்களிடம் பங்கு கேட்க முடியாது . இதுதவிர நீங்கள் தேடி வைத்த எல்லா செல்வங் களும் உங்களது மரணத்திற்கு பின் ரத்த உறவு களால் பங்கு போடப்படும் , அதற்காக அவர்கள் சண்டையிலும் ஈடுபடுவார்கள் . 

இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடு கிறது : 
“ எந்தப் பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத் தையும் பற்றி மனிதன் பெருமையடித்துக் கொள்கின்றானோ , அவை அனைத்தும் இறுதியில் நமக்கே உரியனவாகிவிடும் ; அவன் தனியாகவே நம்மிடம் வருவான் ” ( திருக்குர்ஆன் 19:80 )

" மனிதர்களே ! நீங்கள் அல்லாஹ்வையும் , அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங் கள் . இன்னும் , அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள் களில் இருந்து நீங்கள் தானம் செய்யுங்கள் . உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு தானம் செய்கின்றார்களோ , அவர்களுக்குப் பெரிய தொரு கூலி உண்டு ” . ( திருக்குர்ஆன் 57 : 7 ) . 

எனவே இறைவன் அளித்த அருட்கொடை களில் இருந்து ஒரு பகுதியை மனைவி மக்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு , எஞ்சிய இதரப்பகுதி களை உங்களது ஆன்ம உயர்வுக்காக பயன் படுத்துங்கள் . ஆன்மிகத்திற்காகவும் , ' ஆஹிரத் ' என்று சொல்லக்கூடிய மறு உலக வாழ்விற்காக வும் , இந்த உலக வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொள்ளவதே சிறந்ததாகும் . 

மனிதன் தன் ஆன்ம வெற்றிக்காக உலகில் செல விடும் நேரமே , மனித வாழ்வில் பாக்கியம் நிறைந்த நேரமாகும் . 

மு . முகம்மது சலாகுதீன் , நெல்லை ஏர்வாடி .

Post a Comment

Previous Post Next Post