மௌலானா ஜலாலுதீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது பொன் வரிகளில் இருந்து!

மௌலானா ஜலாலுதீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது பொன் வரிகளில் இருந்து!

# மௌனம் இருளை ஒளியாக்கி விடுகின்றது. 

# சப்தம் ஒருபோதும் பிரச்சினையை சுலபமாக்காது. 

# முறைப்பாடுகள் அர்த்தம் அற்றதாக ஆகும் போது மௌனம் பல அர்த்தங்களை கற்றுத்தரும்.

# மௌனம் தன்னுடைய இலக்கை அடைந்து கொள்வதற்கு உங்களுக்கு உதவி செய்கிறது.

# மௌனம் உங்கள் வெற்றிக்கு உதவுகிறது.

# மௌனம் அது மிகப்பெரும் வணக்கமாகும்.

# மௌனம் உங்களுடைய தேவையற்ற உணர்வுகளை அடக்கி ஒரு ஆளுமையுள்ள மனிதனாக மாற்றி விடுகின்றது.

# மௌனம் எவ்வாறான ஒரு வணக்கம் என்றால் மலக்குமார்களாலும் அதை பதிவு செய்ய முடியாது ஷைதானாலும் பழுதாக்க முடியாது யாருமே அதனைப் புரிந்து கொள்ள முடியாது.

# சிரித்துப் பேசுபவர்கள் திடீரென மௌனம் கொள்ளும் பொழுது அந்த மௌனத்தின் பின் விரோதிகளுக்கு அச்சம் தோன்றிவிடும்.  

# அவமதிக்கப்பட்டவனின்  மௌனத்தை பயந்து கொள்ளுங்கள்.

# இரண்டு விடயங்கள் மனிதனை பலவீனமானவனாக ஆக்கி விடுகின்றது
ஒன்று மௌனம் காக்க வேண்டிய நேரத்தில் பேசுவது. மற்றது பேச வேண்டிய இடத்தில் மௌனம் காப்பது.

# மௌனம்  மிகவும் சிரமமானது ஆனால் எதிரிக்கு மௌனியின் மௌனம் மிகப்பெரிய தண்டனையாகும்.

# மௌனிகளின் துஆவும் பாசமும் மிகவும் சக்தி வாய்ந்தது. 

# மௌனம் அர்த்தமுள்ளது. அது கவலைகளையும் வேதனைகளையும் மனிதனின் உள்ளத்தில் இருந்து உறிஞ்சி விடுகின்றது. 

# மௌனம் யாருக்கு சிறந்ததாகி விடுகின்றதோ அவர் தேவையற்றதை ஒருபோதும் பேசவே மாட்டார்.

Post a Comment

Previous Post Next Post