கல்ஹின்னைக்கு இன்று ஆம்புலன்சும் இல்லை அதைப்பேச ஆம்பளையும் இல்லை

கல்ஹின்னைக்கு இன்று ஆம்புலன்சும் இல்லை அதைப்பேச ஆம்பளையும் இல்லை

கல்ஹின்னையில் சேவை செய்கின்ற குழுமங்கள் என்றும் ,பட்டம் பதவிகள் பெற்றுக்கொண்டவர்கள் என்றும் பெருமை அடித்துக் கொள்கின்றவர்களுக்கான பதிவு இது.
ஒவ்வொரு  மனிதனுக்கும்  வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும், மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும் போன்ற பல எண்ணங்கள் இருக்கும். 

நாம் அதற்காக சரியாக செயல்பட்டால் தான் நமது இலக்கை அடைந்து வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ முடியும். 

குர்ஆனும் .அதன்படி வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையுமே  மனிதர்களுக்கு சிறந்த வாழ்வை தரும் 


1. அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவனே அறிவாளி ஆகிறான்.

2. பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு இணையானவன்.

3. எதிர்கால மகிழ்ச்சிக்கு கல்வியே ஆதாரம்.

4. பேசிக் கொண்டே இருக்காமல் செயலில் இறங்குவது அதை முடிப்பதற்கான வழி.

5. துன்பப் படுபவர்களுக்கு உதவுபவன், இறைவனுக்கு கடன் தருகிறான்.

6. நம்பிக்கை நம்மை வாழவைக்கும். அச்சம் நம்மை கொன்றே விடும்.

7. நமக்கு கிடைக்காததை நினைத்து சோகத்தோடு இருப்பதை விட, நமக்கு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியோடு இருப்பதுதான் வாழ்க்கையில் நிம்மதியைத் தரும்.

8. குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களை வரவேற்க கற்றுக்கொள். எந்த அளவு இதைச் செய்கிறாரோ, அந்த அளவுக்கு வேகமாக முன்னேறுவாய்.

9. நாம் உலகிற்கு வந்ததே சேவை செய்வதற்காக தான் பிறரை அடக்கி ஆள்வதற்கு அன்று!

10. ஆரோக்கியம்தான் உண்மையான செல்வம்! அதற்கு வழி ஏதும் கொடுக்க வேண்டியதில்லை!

அல்லாஹ்வின் மகத்துவத்தை உணர்கின்ற மனிதர்கள்; அல்லாஹ்வின் பிரமாண்ட சக்தியை உணர்கின்றார்கள்; அது தக்வாவாக, இஹ்லாஸாக, ஈமானாக, இபாதத்தாக மனிதனுடைய வாழ்வியல் நடவடிக்கைகளில் வெளிப்படுகின்றது. 

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இதனையே தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்தார்கள், ஏனைய மனிதர்களிடம் ஏற்படுத்தினார்கள், ஏற்படுத்தும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் நாம் துரதிர்ஸ்டவசமாக மார்க்கத்தை வியாபாராமாக்கினோம், எதற்கெடுத்தாலும் உடனடி பத்வா வழங்கும் பத்வா இயந்திரங்களாக உலமாக்களை மாற்றினோம், 

அவர்களும் தமது வயிற்றுப்பிழைப்புக்காக பத்வாக்களை கூறுகின்றவர்களாக மாறினார்கள்.

அதனால் இறையச்சம் எம்மைவிட்டும் நீங்கிவிட்டது. லேபல் முஸ்லிம்களாக மாத்திரம் இன்று நாம் நடமாடுகின்றோம். தயவு செய்து இதனை உணர்வதற்கு முயற்சியுங்கள். உங்களை படைத்தவனின் மகத்துவத்தை அறிவதற்கு முயலுங்கள் அன்பர்களே 

குறிப்பாக கடந்த சில வருடங்களாக கல்ஹின்னையில் ஒரு சில குழுக்கள், அல்லது அமைப்புக்கள் மின்னல் வேகத்தில் தோன்றி சமூகத்தை பாதுகாப்போம் எனும் பெயரில் தோன்றியது.

ஆனால் இன்று பக்கவாதம் போல் ஆகிவிட்டது ஏன் ?
இன்று இவர்கள் எங்கே ஓடி ஒழிந்தார்கள் என்று தெரியவில்லை ?

இவர்களுடைய அழிவுக்கு இவர்களுடைய செயல்பாடுகள்தான் காரணம் .

அல்லாஹ்வுக்கு பொருத்தமற்ற முறையில் நடந்துகொன்டார்கள் என்பதுதான் உண்மையாகும்.

சுயநலப்போக்கு, தற்பெருமை,  ஆணவம்,என்றுமே நிலைத்து நிற்பதில்லை . 

நோக்கம் நல்லதாயிருந்தால் வெற்றியும் தேடி வரும் .நிலைத்து நிற்கும் என்பதற்கு "வேட்டை"மின்னிதழ் ஒரு முன்னுதாரணம் . 

பக்கச் சார்பற்ற செய்திகள்,எவருக்காகவும் துதிபாடாத ஆக்கங்களை எழுதும் தைரியமான எழுத்தாளர்கள் இருப்பதனால் இன்றும் வெற்றிநடை போடுகின்றது வேட்டையும் அதன் வாரிசுகளும்(கல்ஹின்னை டுடே ,சிதிஜயா ).. அல்ஹம்துலில்லாஹ். 

சமூகத் தொண்டர்கள் என்னும் அந்தஸ்துக்கு  இன்று கல்ஹின்னையில் நிலையான அடையாளம் 
1 கல்ஹின்னை ஒன்றியம் 
2 கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகமும்தான்.

ஆமைபோல் செயல் படுகின்றன ஆயிரம் முட்டை யிட்டாலும் சத்தமில்லாமல் அடுத்தவர்களின் தன்மானம் பாதுகாத்து செயல்படும் ஓர் குழுவாகும்.

போட்டோக்கள் எடுத்து பெருமை பேசாத கல்ஹின்னை ஒன்றியமும் ,ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகமும் இந்த WHATSUP குழுமங்கள் செய்யாத சேவைகளை கல்ஹின்னை மக்களுக்கு செய்துள்ளார்கள்.

ஆனாலும் பெருமை பேசித் திரிவதில்லை .சோசியல் மீடியாக்களில் போட்டோக்களை போட்டு விளம்பரப் படுத்துவதில்லை.

ஆனால் புதியதாக முளைத்துள்ள  சில குழுக்கள் கோழியைப் போன்று  ஒரு  முட்டையையிட்டதும் ஊர்முழங்கச் சத்தம் போடுவதும் ,பெருமை பேசி மக்களை நம்ப வைப்பதும் வழக்கமாகிவிட்டது.

கல்ஹின்னைக்கு ஆம்புலன்ஸ் வாங்கும்  ஆலோசனையை ஒரு குழுமம்  முன் வைக்க ,அதற்கு ஆயிரம் ஆதரவுகள் பெருக,தினமும் வாதங்கள் ,ஆலோசனைகள் என்று WHATSUAP கலைகட்டியதை நாம் மறக்கவில்லை.


எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும் போது சகுனியை போன்று சிலர் புகுந்து நாசம் பண்ணி ,ஆம்புலன்ஸ் திட்டத்தை குளிதூண்டிப் புதைத்து விட்டாச்சு,

கல்ஹின்னைக்கு இன்று ஆம்புலன்சும் இல்லை அதைப்பேச ஆம்பளையும் இல்லை 

கல்ஹின்னையின் பெயர் தாங்கிய WHATSUP குழுமங்கள் இன்று தாராளமாக இருக்கின்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு .கல்ஹின்னையின் வளர்ச்சிக்காக என்று ஆரம்பிக்கப் பட்ட குழுமங்களில் ஒருசில இன்றும் நல்லவற்றை நல்ல முறையில் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் ஒரு சிலர் பெருமைக்கு மா இடிப்பது என்று சொல்வோமே.......அப்படிதான் செய்து கொண்டிருந்தார்கள். 

ஆனால் அவர்களால் ஊரில் பெரிதாக பெயர் எடுக்க முடியாமல் போனது.

பாவப் பட்டவர்கள்.....

அவர்களுடைய எண்ணம் ஒன்றுதான் .தானும் ஹாஜியார்களைப் போன்று பெயர் எடுக்க வேண்டும் என்ற தற்பெருமை .

அதுமட்டுமன்றி சில குழுமங்களில் பக்காளி விமர்சனங்கள் செய்வதற்காக ஒருசிலர் இருக்கின்றார்கள்..

இவர்கள் ஒருவகையான வினோத மனிதர்கள். 

எதைப் பாராட்ட வேண்டும் எதற்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என்ற விவஸ்தையில்லாத மனிதர்கள்.

எதோ ஒன்று கிடைத்துவிட்டால் அது எப்படி ,அதில் உண்மையிருக்கின்றதா,பட்டங்கள் உண்மையாகவுமே கிடைத்ததா ,அல்லது பணம் கொடுத்து பட்டங்கள் சூடிக்கொண்டார்களா என்றெல்லாம் பார்க்காமல் கண்டபடி விமர்சனங்கள் செய்வது ,அதை விளம்பரப் படுத்துவது போன்ற பக்காளி வேலைகள் செய்வது ஒரு சிலருடைய பலக்கதோஷமாகிவிட்டது.

ஒருசில குழுமங்கள் மிகப் பெரிய பட்டம் பெற்ற அட்மின்களால் நடாத்தப் படுகின்றதை போன்று பெருமையடித்துக் கொள்கின்றார்கள்.

தப்பித் தவறி ஊரைப்பற்றிய செய்திகளில்லாமல் நல்ல வேறு செய்திகளை பதிவிட்டால் சில பெரிய படித்தவர்கள் அதை கண்டித்து COMMENTS எழுதுவார்கள்.

ஊரின் முன்னேற்றதைப்பற்றிய செய்திகள் மட்டும்தான் இங்கு பதிவிட வேண்டும் என்று எதோ கொலை செய்தவரைப் போன்று ஒரு பதிவைப் போட அதை FORWARD பண்ணும் ஒரு கூட்டம்.

சில குழுமங்கள் ஒருசிலருக்கு பணம் கொடுத்து பதிவுகளுக்கு பாராட்டும் ,COMMENTS-ம் எழுத  நியமித்துள்ளதாக தகவல்கள் கிடைத்தன. 

வேட்டையை தவிர கல்ஹின்னையிளிருந்து முலைத்த அத்தனையும் அழிந்துகொண்டிருக்கின்றன.

உண்மையும் உறுதியும் இருந்தால்  வெற்றிகள் தேடி வரும் என்பதற்கு வேட்டையின் ஏழு வருட வெற்றிப் பயணம்  ஓர் உதாரணம்.

வேட்டையோடு பயணித்து ,புகழ்பெற்று வேட்டைக்கு துரோகம் செய்ய நினைத்தவர்கள் நினைக்கின்றவர்கள் தோல்வியை மட்டுமே சந்திப்பார்கள். 

விரைவில் அவர்களின் துரோகங்கள் வெளியில் வரும். கல்ஹின்னை மக்கள் அறிந்துகொள்வார்கள்.


 


1 Comments

  1. Masha Allah Great job யார் அந்த நபர் ரியாஸ் ஹலீமதீன் என்பவரா

    ReplyDelete
Previous Post Next Post