காலம் மாறிவிட்டது

காலம் மாறிவிட்டது


ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று என்னும் காலம் மாறிவிட்டது. 

காரணம் 

மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,

உறவினர்களுக்கு உரிமை இல்லை,

ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை,

தான் பெற்ற பிள்ளைகழோடு மகிழ்ச்சியாய் விளையாட ஆர்வம் இல்லை

மெஷின் போன்ற வாழ்க்கை,

மெஷின்னுடன் தான் வாழ்க்கை,


மனைவி இல்லையென்றாலும் பரவாயில்லை மொபைல் இருக்கிறது, 

உறவினர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை பேஸ்புக் இருக்கிறது,

நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை வாட்ஸ்அப் இருக்கிறது. 

அக்காலத்தில் கிடைத்த சந்தோஷத்தில் இப்போழுது 75% சந்தோஷம் கிடைக்காத காரணம் மொபைல் தான்.

உலகில் மிக பெரிய ஏமாற்றம் போர் அடிக்கும் நேரத்தில் மொபைல்ல சார்ஜ் இல்லை என்றால் தான்.

நாம் வாழும் வாழ்க்கை மிக குருகிய காலமே நேரத்தை மொபைல் என்ற மெஷினுடன் போக்காமல் சந்தோஷமாக வாழ வழி தேடுவோம் தேடுவது கூகுளில் அல்ல குடும்பதார்களிடம் நண்பர்களிடம் பேசுவதின் மூலம்,சிந்திப்பதின் மூலம், விளையாடுவதின் மூலம், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது உயிரற்ற பொருட்களை தூக்கி எரிந்து விட்டு உயிருள்ள பொருட்களுக்கு மதிப்பு கொடுப்போம்.

எப்போதும் போல பார்வேர்ட் மெஸெஜ் என்று அலட்சிய படுத்தாமல் நம் வாழ்க்கையை அழகாக்குவோம்.

உன் வாழ்க்கை உன் மொபைலில் இல்லை உன் அன்பில்

அன்புடன் சபீர் முகம்மது


 


Post a Comment

Previous Post Next Post