கல்ஹின்னையில்,விவசாயத் திணைக்களத்தின் 65ஆம் ஆண்டு நிறைவு தின விழா

கல்ஹின்னையில்,விவசாயத் திணைக்களத்தின் 65ஆம் ஆண்டு நிறைவு தின விழா


விவசாயத் திணைக்களத்தின் 65ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற தேசிய விஷேட நிகழ்வு  கல்ஹின்னை பெபுலகொல்லையில் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேசிய நிகழ்வில் அங்கும்புற விவசாயத் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்ஹின்னையைச் சேர்ந்த பூஜாப்பிடிய (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)  பிரதேச சபை உறுப்பினர்  உவைஸ் ரசான் அவர்களும் ,விஷேட அதிதியாக பூஜாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர் (ஐ.தே.க)கலீல் மந்திரி அவர்களும். இந்நிகழ்வை அழகிய முறையில் ஏற்பாடு செய்த கல்ஹின்னை விவசாய அதிகாரி அனீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது 

தேசிய ரீதியிலான மேலும் பல நிகழ்வுகள் கல்ஹின்னையில் நடைபெற கல்ஹின்னை டுடேயின் வாழ்த்துக்கள் 



கல்ஹின்னை டுடே நிருபர் 

 

 


 


Post a Comment

Previous Post Next Post