நீ உன்னை அதிகம் விரும்புகின்றாயா அல்லது என்னையா?

நீ உன்னை அதிகம் விரும்புகின்றாயா அல்லது என்னையா?

காதலி தன் காதலனைக் கேட்டாள் 

"நீ உன்னை அதிகம் விரும்புகின்றாயா அல்லது என்னையா? அதற்கு அவன் பதிலளித்தான். நான் என்னைப் பொறுத்தவரை பிணமாக இருக்கின்றேன், உன்னைக் கொண்டே உயிரோடு இருக்கின்றேன்.  என்னைக் கொண்டும், என் குணப்பாடுகளைக் கொண்டும் இல்லாமையாக இருக்கின்றேன், 


உன்னைக் கொண்டே இருப்புக் கொண்டுள்ளேன். நான் என் ஞானத்தை மறந்து விட்டுள்ளேன், உனது ஞானத்தைக் கொண்டே அறிவாளியாக இருக்கின்றேன். நான் எனது ஆற்றல்களை எல்லாம் அழித்து விட்டேன், உனது சக்தியைக் கொண்டே ஆற்றல் கொண்டவனாக இருக்கின்றேன். 


நான் என்னை விரும்புகிறேன் என்றால் நான் உன்னை விரும்புவதேயாகும். நான் உன்னை விரும்புகிறேன் என்றால் நான் என்னையே விரும்புவதாகும். "
பாரசீக ஞானி மௌலானா ரூமி


 


Post a Comment

Previous Post Next Post