கல்ஹின்னை நயீம் சிறுகதைகள்

கல்ஹின்னை நயீம் சிறுகதைகள்



1.அழகான உறவுகள்!
பதட்டத்தோடு வீட்டுக்குள்  வந்த வித்யா..பார்வதி அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சடாரென சோபாவில் சாய்ந்தாள்.

"என்னடி ஒண்ணுமே பேசாம இருக்கே?"பார்வதி அம்மா கேட்டாள்.

"என்னதான் பிரச்சின. எதாச்சும் பிரசினன்னா .வாயைத் திறந்து சொல்லு..சும்மா மூஞ்ச தூக்கிட்டு. இருக்காம.அண்ணன் இப்ப வருவான். அவன்கிட்டேயே சொல்லு"என்றவள் சமயலறைக்குச் சென்றாள்.

எப்படிப்பட்ட பிரச்சினை என்றாலும் மூத்தவன் எடுக்கிற முடிவுதான் பார்வதி அம்மாவின் முடிவும். 

"பிரச்சினையே அவன்தான்..." கடுப்புடன் சொன்னாள் வித்தியா.

"என்ன டி சொல்றே.?."அம்மா ஆச்சரியத்தோடு கேட்டாள். 

வித்யா பதில் சொல்லவில்லை
"சொல்லித் தொலையேண்டி!" மீண்டும் அம்மாவின் அதட்டல். 

"அம்மா அண்ணியக் கூப்பிடு. அவதான் அண்ணன சமாளிக்கணும்" பயம் கலந்த குரலில் கெஞ்சினாள் வித்யா.

அண்ணன் வீடு பக்கத்து வீடுதான். எதோ தப்பு நடந்திருக்கு அதனால் தான் வித்யா பயப்படுகின்றாள் என்று மட்டும் பார்வதி அம்மாவுக் குப்புரிந்தது. 
அண்ணனுக்கு வித்யா என்றால் தன் உயிரை விடவும் மேலான பாசம்.வித்யாவை மிகவும் பாசத்தோடும் கட்டுப்பாடோடும் வளர்ப்பவன்.

வித்யாவின் அப்பா இறக்கும் போது அவளுக்கு 7வயதுதான் இருக்கும் அப்பாவின் கடைசி ஆசைப்படி வித்யாவை வளர்த்து, படிக்க வைத்து இன்று தொழில் செய்கின்றாள் என்றால் அது அந்த அண்ணனின் தியாகத்தின் பிரதிபலிப்புத்தான்.

அண்ணனுக்கேற்ற அண்ணி. வித்யாவை வளர்த்து ஆளாக்கி நல்லதொரு துணையை தேடிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு குழந்தைக்கு மேல் நிறுத்தியவள்தான் அண்ணி.

வித்யாவுக்காகவே வாழுகின்ற அண்ணனும் அண்ணியும்.

வித்யாவும் அண்ணனிடமும் அண்ணியிடமும் உயிரையே வைத்திருந்தாள். 
அண்ணனிடம் கேட்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டாள் வித்யா .

அண்ணி வந்தாள்
 "வித்யா என்னடி.என்ன பிரச்சினை?"

"அண்ணி நான் வேலை பார்க்கிற இடத்தில் சுரேஷ் என்கிறவறோட ஹோட்டல்ல டீ குடிசிட்டிருந்தேன் அதஅண்ணன் பார்த்துட்டான் ."தயக்கத்துடன் சொன்னாள் வித்யா

"எதாவது சொன்னாரா?"அண்ணி கேட்டாள்.

“இல்ல ஒன்னும் சொல்லல்ல முறைச்சான்.நான் உடனே கிளம்பிட்டேன் அதுதான் பயமாயிருக்கு"என்றாள் வித்யா.

"சரி நீ போய் சாப்பிடு.நான் பார்த்துக்கிறேன் "என்றாள்  அண்ணி

"இல்ல அண்ணி அண்ணன் வரட்டும் அப்புறம் சாப்பிட்றேன்" என்றால் வித்யா.

அண்ணனும் வந்தான்.வித்யா. பயத்தில் அண்ணியின் கையைப் பற்றிக்கொண்டாள்.

"என்ன விசேஷம்? ரெண்டு மேடமும் எதோ ரகசியம் பேசுராப்ப்ள"என்றான் அண்ணன்.

 "ஒண்ணுமில்ல சும்மாதான்" என்றாள் அண்ணி.

'வித்யாவுக்கு எதோ பிரச்சினையாம். என்கிட்ட சொல்ல மாட்டேங்றா. என்னெண்டு கேளுப்பா'என்றபடியே சமையரையிளிலிருந்து வெளிப்பட்டாள் பார்வதி அம்மா

 "அம்மா அவளோட பிரச்சினை என்னண்டு எனக்குத் தெரியும் அது முடிஞ்சிருச்சி. நம்ம புள்ள அவளாகவே மாப்பிள்ளைய தேடிக்கிட்டா"என்றான் அண்ணன் இப்ராஹிம் கிண்டலாக.

"இல்லண்ணே சுரேஷ் என்ன லவ் பண்றதா சொன்னப்ப அண்ணனோட சம்மதமில்லாம இந்த வீட்ல எதுவும் நடக்காதென்று சுரேஷ் கிட்ட சொல்லியிருக்கேன். அண்ணன் விருப்பமில்லாமல் எதுவும் நடக்காது அண்ணன் கிட்டேயே பேசுன்னு சொல்லறதுக்குத்தான் அவரோட ஹோட்டல்ல உட்கார்ந்திருந்தேன் அவ்வளவுதான்."என்றவள் அழுதுகொண்டே கதீஜாவின் கையைஇருகப்பற்றிக் கொண்டாள் வித்யா .

"சரி அழாத அந்தப் பையனோட எல்லாம் பேசிட்டேன்.அவன் உன்ன விரும்புறதா சொன்னான் நல்ல பையன்தான் அவனோட அப்பா அம்மாவோட பேசிட்டுத்தான் வந்தேன்.தெரிஞ்சவங்க, ஊர்க்காரங்க .நல்ல குடும்பம்.அவங்களும் சொல்லிட்டாங்க நீதான் அவங்க வீட்டு மறுமகளாம்அடுத்த வாரம் பெண் பார்க்க வர்றாங்களாம்"" சொல்லி முடிப்பதற்குள் அண்ணியை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள் வித்யா.

"அடிப்பாவி இதற்குத்தானா இவ்வளவு நடிப்பு?'என்றாள் பார்வதி அம்மா
அதே நேரம் பக்கத்துத் தெரு மஸ்ஜிதில் மஹ்ரிப் தொழுகைக்காக "அதான்" ஒலித்துக் கொண்டிருந்தது. 

 "இப்ராஹீம் போய் நமாஸ் முடிச்சிட்டு வா சாப்பிடுவோம்" என்றாள் பார்வதி அம்மா

பார்வதி அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

 கடந்தகால நினைவுகள் அவளை ஆட்கொண்டது,
ஹமீத் ஹாஜியார் என்றால் அந்த ஊரில் தெரியாதவர்கள் யாரும் இல்லை . ஜாதி மதங்களைத் தாண்டிய பொதுச்சேவைகளை செய்பவர் என்பதால் ஹமீத் ஹாஜியாரை ஊர் மக்கள் மிகவும் நேசித்தார்கள். மனைவி சுபைதாவும் அப்படித்தான்.

சாதாரண வசதியுள்ள குடும்பம். ஒரேபிள்ளை இப்ராஹீம்.

நெருங்கிய சொந்தங்கள் என்று சொல்ல எவரும் இல்லை.தூரத்து சொந்தங்கள் எப்போதாவது வந்து போவார்கள்.

பக்கத்து வீடு என்பதால் முருகன் ஐயாவின் குடும்பத்தோடு மிகவும் நெருங்கிய சொந்தங்கலாகப் பழகினார்கள்.

முருகன் ஐயா "என்றும் அவருடைய மனைவி பார்வதியை "பார்வதி அம்மா" என்றும் ஊர் மக்கள் செல்லமாக அழைப்பார்கள்.

அவர்களுக்கும் ஒரே பெண் பிள்ளைவித்யா..
வசதியான குடும்பம். முருகன் ஐயா வியாபாரமும் பார்வதியம்மா ஊர் பாடசாலையில் ஆசிரியையாகவும் வசதியோடு இருந்தார்கள்
இரண்டு குடும்பங்களும் ஒரே இரத்த சொந்தங்களாக இருந்தது ஊர் மக்களுக்கும் தெரியும்.

.ஒரு சிலருக்கு அந்த உன்னதமான உறவு பொறாமைப்பட வைத்தாலும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை .

 இப்ராஹீமிடம் மிகவும் பாசமாயிருந்தார்கள் முருகன் ஐயாவும், பார்வதி அம்மாவும்.

இப்ராஹீமை விட நான்கு வயது  இளையவளான வித்யாவிடம் சொந்த மகளைப்போல் அன்பு காட்டினார்கள், ஹமீத் ஹாஜியாரும் அவர் மனைவியும்.
வித்யாவிற்கும் இப்ராஹீமுக்கும் இடையிலான அண்ணன் தங்கை உறவு மிக,மிக ஆழமாக ஆலமர வேர்போல் வளர்ந்து கொண்டிருந்தது.
அந்த உறவு தெளிந்த நீரோடையாக இருந்தது. ஜாதி மதங்களைக்கடந்த ஒரு புனிதமான உறவாயிருந்தது.

இப்ராஹிமுக்கு ஆறு வயதாயிருக்கும் போது ஒரு விபத்தில் அம்மாவும் அப்பாவும் இறந்துவிட தனிமைப்பட்ட இப்ராஹீமை தன் சொந்தப் பிள்ளைபோல் வளர்த்தார்கள் முருகன் ஐயாவும் , பார்வதி அம்மாவும்.
.இப்ராஹீமை தத்தெடுக்க எத்தனையோ பேர் முயன்றும் முடியவில்லை முருகன் ஐய்யா குடும்பத்தோடு இருப்பதாக அடம்பிடித்து அவர்களோடே வாழ்ந்தான் இப்ராஹிம்.

இப்ராஹீமை ஒரு இஸ்லாமியனாகவே வளர்த்தார் முருகன் ஐயா.
ஊர் பள்ளி நிர்வாகத்தினரிடம் கதைத்து வீட்டில் அவனுக்குரிய வசதிகளை செய்து கொடுத்து படிப்புக்குரிய அத்தனை ஒழுங்குகளையும் கனகச்சிதமாய் செய்தார் முருகன் ஐயா.

பார்வதி அம்மாவிடம் அடிக்கொருதரம்சொல்வார் "பார்வதி. இப்ராஹீம் நம்ம புள்ள. நான் இல்லாத காலத்திலேயும் அவன ஒரு இஸ்லாமியனாகத்தான் வளர்க்கணும் என்பார்..

"நீங்க அதப்பத்தி யோசிக்காதீங்க. அவன என் புள்ளயா வளர்ப்பேன்"என்பாள் பார்வதி அம்மா.

வித்தியாவுக்கு ஏழு வயதாகும் போது முருகன் ஐயா நெஞ்சு வழியென்று படுத்தவர் எழும்பவேயில்லை. பிள்ளைகளை கவனிக்கும் பொறுப்பு பார்வதி அம்மாவுக்கு மாறியது. -

இப்ராஹீமை மூத்த பிள்ளையாக இஸ்லாமியனாகவே வளர்கெடுத்து , என்ஜினியராக உயர்த்திய பெருமை பார்வதி அம்மாவுக்குத்தான்.

தனியார் கம்பனியில் வேலை, கைநிறைய சம்பளம் அப்பாவின் சொத்துக்கள்.முருகன் ஐயாவின் சொத்துக்கள் என்று அத்தனையும் அவன் பெயரில் இருந்தாலும் அவனுக்கு எல்லாமே அம்மாவும் தங்கையும்தான்.

அம்மாவையும் தங்கையையும் கவனிக்கும் பொறுப்பை இப்ராஹீம் ஏற்றுக் கொண்டு. வித்யாவை வளர்த்து ஆளாக்கி இன்று வித்யாவும் ஒரு தனியார் கம்பனியில் வேலைபார்க்கின்றாள்.

அப்படியிருந்தாலும் அண்ணனிடம் கேட்காமல் எந்த ஒரு முடிவையும் வித்யா எடுப்பதில்லை .

அம்மாவையும் அண்ணியையும் எதிர்த்துப் பேசுவாள்.அண்ணனை எதிர்த்து ஒருவார்த்தையேனும் பேசியதில்லை.

ஊர்மக்களே பெருமைப்படும் அளவுக்கு அந்த உறவு இருந்தது.

.இப்ராஹீமுக்கு வரன் தேடும் போது இப்ராஹீம் சில நிபந்தனைகளை வைப்பான்.

"என் அம்மா ஒரு இந்து. எனக்கு ஒரே தங்கை வித்யாவும் இந்து. இவர்களை நான் இல்லாத காலத்திலும் அன்பாகப் பார்க்க வேண்டும்". என்று தரகர்களிடம் சொல்லி விருப்பப்பட்டு வந்ததுணைதான் கதீஜா.

இப்ராஹீமின் திருமணத்தை பள்ளி நிர்வாகத்தவரிடம் சொல்லி இஸ்லாமிய முறைப்படியே நடத்தினாள் பார்வதி அம்மா.

கணவனின் ஆசைப்படியே கதீஜாவும் அன்பாக இருந்தாள்.

"அம்மா பசிக்குது சாப்பாடு ரெடியா?".தொழுகை முடிந்து திரும்பிய இப்ராஹீமின் குரல் கேட்டு நினைவு திரும்பிய பார்வதி அம்மா
'ஆமா.வந்து சாப்பிடுப்பா" என்றாள்.

"அண்ணே !என்னோட கோபமா ?"கண்கள் குளமாக தயங்கித், தயங்கிக் கேட்டாள் வித்யா.

"இல்லம்மா --கல்யாணம் முடிஞ்சி எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிடுவியோன்னு கவலையாயிருக்கு"என்றான் கண்கள் கலங்க.
முதன் முதலாக அண்ணனின் கண்கள் கலங்கியதைக் கண்ட வித்யாவின் நெஞ்சு வெடித்து விடும்போளிருந்தது.

கதீஜா அண்ணியை கட்டியணைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.
"அண்ணி எனக்கு கல்யாணமே வேணாம் உங்களோடே இருக்கிறேன்." 

'வித்யா அப்படியெல்லாம் சொல்லக்கூடாது உங்க அண்ணன் கவலையில் உணர்ச்சி வசப்பட்டுட்டார்.அவருடைய கடமை இது...இந்த கடமைய நீ நிறை வேற்றினால்தான் அவருக்கு திருப்தியாயிருக்கும்" என்று வித்யாவை ஆறுதல் படுத்தினாள் கதீஜா.

ஜாதி மதங்களைக் கடந்த பாசப்போராட்டம் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

====

  





2.கடைசிப் பூ 


அன்று கிருத்திகாவுக்கு அழகான ஒரு மலர் கொத்து வந்தது.ஆவலுடன் கையில் எடுத்தவள் அந்தப் பூக்களை , முத்தமிட்டாள்.

அத்தனையும்அழகான பூக்கள் 

அதில் கூடவே ஒரு சிறு குறிப்பும் இருந்தது.

 அழகான எழுத்தில் எழுதப்பட்டிருந்தது,

"இந்தப் பூங்கொத்தில் உள்ள கடைசி மலர் இறக்கும் நாள் வரை உன் மீதான என் காதல் நீடிக்கும்."என்று எழுதியிருந்தது.

என் அன்பு மனைவிக்கு உன் அன்புக் கணவனின் அழகிய பரிசு. என்று எழுதிருந்தது.

அலுவல் விஷயமாகச் வெளியூர் சென்றிருந்த அவளது கணவனிடமிருந்து வந்திருந்தது.

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் கிருத்திகா.அவளுடைய கண்களில் கண்ணீர் பீறிட்டது.கனவனின் அன்புக்கு நிகர் எதுவும் இல்லை என்று மனதில் குதூகளித்தவள், இப்படியொரு கணவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்

ஆனாலும் அவளுக்கு ஒரு சந்தேகம் ,

இந்தப் பூக்கள் ஒருநாளிளோ அல்லது இரண்டு நாளிலோ வாடி வதங்கிவிடும் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் இறந்துவிடுமே?

கவலையும் கூடவே தொற்றிக்கொண்டது,
எதற்காக இப்படி ஒரு வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்.?கடைசி மலர் இறக்கும் நாள் வரை.....!

பூக்களை தண்ணீரில் போட்டுவைத்தால் வாடாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு பிளாஸ்டிக் பாக்கெட்டில் தண்ணீரை நிரப்பி  ஒவ்வொரு பூவாக எடுத்து தண்ணீரில் போட்டாள்.

மனதில் ஏகப்பட்ட குழப்பத்தோடு பூக்களை எண்ணிக்கொண்டிருந்தாள் கிரித்திகா

அதில் 11 பூக்கள் இருந்தது.

அடுத்த நாள் கழித்து பார்க்கும்போது , பூக்கள் அனைத்தும்  கொஞ்சம் கொஞ்சமாக அழகு குறைந்திருந்தன.

மனதில் படபடப்புடன் ஒவ்வொருபூவாக நோட்டமிட்டாள்.

ஒரு பூவைத் தவிர அனைத்தும். அழகு குறைந்து வாடும் நிலையில் இருக்க ஒரு பூ மட்டும் அழகு குறையாமல் இருந்தது,

அந்தப் பூவை கையில் எடுத்தவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. மகிழ்ச்சியில் தன்னையறியாமல் சத்தமாக
"ஐ லவ் யூ சோ மச் மை டார்லிங் "என்றாள் கீர்த்திகா

அந்தப் பூ ...

பூங்கொத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும் செயற்கை பூ என்று தெரிந்தது.

கடைசிப் பூவை முத்தமிட்டு மகிழ்ந்தாள் கிரித்திகா 







3.கன்னத்தில் முத்தமிட்டாள்...!
"நான்  இல்லாமல் ஒரு வாரம் உன்னால் வாழ முடியுமா?"திடீரென்று கேட்டாள் கீர்த்திகா .

"என்ன புதுசா ஒரு கேள்வி?"சாதாரணமாய் கேட்டான் மோகன்.

"முடியுமா முடியாதா"உறுதியாகக் கேட்டாள் .அவளுடைய வார்த்தைகள் ஆணித்தரமாய் வெளிப்பட்டது.

"கொஞ்சம் கஷ்டம்தான் .முயற் சி பண்றேன்"என்றான் மோகன் .சிரித்துக்கொண்டே.
.
"ஆனால் ஒரு கண்டிஷன் "

"என்ன?"

"கோல்  பண்ணக்கூடாது.மெசேஜ் பண்ணவும் கூடாது"

"கீர்த்தி என்னதான் பிரச்சினை ?ஒரு வருஷமா லவ் பண்றோம் .ஆனா நீ இப்படி ஒரு நாளும்  கேட்டதில்ல..வீட்டில ஏதாவது பிரச்சினையா?"சற்று குழப்பத்தோடு கேட்டான் மோகன்.

"பிரச்சினை ஒன்னுமில்ல .எனக்கு ஒரு ஆச .உன்ன புரிஞ்சிக்க இப்படி ஒரு டெஸ்ட் .அவ்வளவுதான்" என்றாள் கீத்திகா.

"முடியுமா மோகன்?"

"சரி .இந்த ஒரு வருஷமும் உன்னுடைய ஆசைபடிதான் நடந்துக்கிட்டேன் .இதுவும் உன்னுடைய ஆசை என்றால் அதற்கும் நான் தயார்.உன் சந்தோசம்தான் எனக்கு முக்கியம் "என்றான் மோகன் .

கீர்த்திகாவின் திடீர் மாற்றம் அன்றைய தினம் அவனுக்கு சற்று வித்தியாசமாயிருந்தது.கீர்த்திகாவின் முகத்தில் புன்னகையில்லை .அவளுடைய அழகிய முகம் வாடியிருந்தது.அவளால் எதோ ஒரு ரகசியத்தை தன்னிடம் வெளிப்படையாக கூற முடியாமல் இருப்பதை மட்டும் யூகித்துக் கொண்டான் மோகன்.

"சரி திரும்பவும் கேற்கிறேன்.ஏதாவது பிரச்சினையா?"

"அப்படி எதுவும் இல்ல.நீ தைரியமா இரு .நான் சொல்றபடி உன்னால் இருக்க முடியுமான்னு பார்க்க ஒரு ஆசை.உன்னை தவிர வேற ஒருத்தன் எனக்கு தாலி கட்டிட முடியுமா?"என்றவள் மோகனின் கைகளை இறுகப் பற்றிகொண்டு "ஒரு முத்தம் கொடு"என்றாள்

"கீர்த்தி இப்படி பப்ளிக்ல ..என்ன இது?ஆச்சரியமாகக் கேட்டான் மோகன்.

"எவன் பார்த்தாலும் என்ன பிரச்சினை?நான்தான் உன் மனைவி?என்றவள் பதிலுக்குக் காத்திராமல் மோகனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

மோகனுக்கு எதுவும் புரியவில்லை .பொது இடங்களில் கைகளைக் கோர்த்து நடப்பதையே விரும்பாத கீர்திகாவா இப்படி?அவனால் நம்ப முடியவில்லை.

"சரி...இந்த நேரத்தில் இருந்து ..நோ கோல்..நோ மெசேஜ் ...ஓகேவா? ..கவனமாயிரு ..நான் போகணும் நேரமாயிடுச்சி...போறேன் "என்றவளின் கண்கள் கலங்கிருந்தது.

"கீர்த்தி கொஞ்சம் கஷ்டமாயிருக்கு .பரவாயில்ல நீயும் பத்திரமாயிருந்துக்க ..லவ் யூ ஸோமச் "

"லவ் யூ டா என் செல்லம் "என்றவள் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.

அவள் போவதையே பார்த்துகொண்டிருந்தான் மோகன்.

.திரும்பத் திரும்ப பிளையிங் கிஸ் கொடுத்துக்கொண்டே சென்றவள் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள்.

இவளுக்கு ஏன் இப்படியொரு ஆசை?.டெஸ்ட் பன்னுவதென்றாலும் இப்படியா?

இந்த ஒரு வாரம் எந்த வித தொடர்புமில்லாமல் இருக்கவேண்டும்.

கடந்த ஒரு வருட காதலில் அவளைப்பிரிந்து ஒரு நாளும் இருந்ததில்லை 

சந்திக்காமல் இருந்த நாட்களில் மொபைலே கதி என்று கழிந்த நாட்களும் உண்டு .மோகன் பேசவில்லை என்றால் திட்டித் தீர்ப்பாள்.வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவாள் .பிறகு மன்னிப்புக் கேட்டு அழுவாள்.

"மோகன் உன் மேல உசுரையே வச்சிருக்கேன் அதனாலதான் கொஞ்சம் நேர்வசாயிட்டேன்".என்று பல தடவைகள் மன்னிப்புக் கேட்பாள். 

அப்படிப்பட்ட கீர்த்தியா இன்று இப்படி நடந்துகொண்டாள்?

மோகனால் ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை .

டெஸ்ட் தொடங்கிவிட்டது ,

தினமும் படுக்கைக்குச் செல்லுமுன் கீர்திகாவிடம் லவ் யூ சொல்லிவிட்டு உறங்கும் மோகனுக்கு அன்று மிகவும் கஷ்டமாயிருந்தது.தினமும் மொபைல் முத்தம் கொடுத்தவனுக்கு கீர்த்தனாவின் நேரடியாகக் கிடைத்த முத்தம் சற்றே ஆறுதல்பட வைத்தது..

கட்டிலில் அங்கும் இங்குமாக புரண்டு படுத்தவனுக்கு விடிந்ததுகூட தெரியவில்லை.

அவசர அவசரமாய் வேலைக்குப் புறப்பட்டவனுக்கு கீர்த்திகாவின் நினைவுகள் மீண்டும் வர தினமும் அவளை சந்திக்கின்ற இடத்தை உற்றுப்பார்த்தான். 

எங்காவது ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு  தன்னை ஆச்சரியப்படுத்த மாட்டாளா என்ற ஏக்கம் அவனுள் பட படக்க வைத்தது.

ஐந்தாவது நாலாகிவிட்டாலும் அவனுக்குள் அந்த படபடப்பு அடங்கவில்லை இன்னும் இரண்டு நாட்கள்தானே என்று ஆறுதலடைய நினைத்தாலும் அவனால் முடியவில்லை.நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது .

கடைசி ஏழாவது நாள் .......இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தான் மோகன் .

அடுத்த நாள் முதல்வேலையாக கீர்த்தனாவுக்கு போன் பண்ணவேண்டும் .ஐ லவ் யூ சொல்ல வேண்டும்,மிஸ் யு சொல்லவேண்டும் ..

பலவிதமான கற்பனைகளுடன் விடிந்தது ஏழாவது நாள் .

ஏழு நாட்கள் அவனுக்கு ஏழு வருடங்களைப் போன்றிருந்தது.

முதல் வேலையாக கீர்த்தனாவுக்கு கோல் பண்ணினான் .

அவளுடைய மொபைல் ஆப் பண்ணியிருந்தது.மீண்டும் ,,,மீண்டும் முயற்சி செய்தான் .பதில் ஒன்றே.மொபைல் ஆப் பண்ணியிருந்தது .

மோகனுக்கு படபடப்பு அதிகமாகியது.

விடியற்காலை ஏழு மணி என்பதால் இன்னும் எழுந்திருக்காமல் இருக்கலாம் .

அவசரமாக தன்னை தயார்படுத்திக்கொண்டு புறப்பட்டான் .பதட்ட்டம் அவனை துரத்திக்கொண்டிருந்தது.

மெசேஜ் அனுப்பினான்.ஐ மிஸ் யு ஸோமச் ....மெசேஜ் போய் சேரவில்லை .

தொடர்பு கொள்ள முடியவில்லை.மோகனுக்கு பிரஷர் தலைக்கேறியது.

"என்ன இப்படி ஒரு நாடகத்த நடத்திக்கிட்டிருக்காள்.விருப்பம் இல்லேன்னா நேரடியாகச் சொல்லலாம்தானே ..?இப்படி ஒரு விபரீதமான டெஸ்ட் தேவையா?...கீர்த்திகா உன்ன எவ்வளவு காதலிக்கின்றேன் என்று உனக்குத் தெரியாதா?"மனதில் பலவாறு புலம்பிக்கொண்டிருந்தான் மோகன் .

மோகனுக்கு தலை சுற்றுவதைப் போன்றிருந்தது .ஒரே குழப்பமாயிருந்தது.

என்ன நடந்திருக்கும் ?அவளாக வைத்த டெஸ்ட் .அதில் நான் வெற்றி பெற்றுள்ளேன் /மகிழ்ச்சியுடன் அவளாகவே தொடர்புகொல்வாள் என்று நினைத்திருந்த மோகனுக்குள் சந்தேகம் தொற்றிக்கொண்டது.

ஆபீசுக்கு கோல் பண்ணி இன்று வேலைக்கு வரமுடியாது உடம்புக்கு சரியில்லை என்று அறிவித்தவன் நேரடியாக கீர்த்திகாவின் வீட்டுக்கு புறப்பட்டான் .

5 கிலோ மீட்டர் தூரம்தான் ,ஒரு முறை அவனை அழைத்துக்கொண்டுபோய் தூரத்திலிருந்து காட்டியிருக்கின்றாள்.

அவளுடைய வீட்டில் எவருக்கும் மோகன் அறிமுகமில்லை.என்றாலும் துணிவுடன் புறப்பட்டான் .

குறிப்பிட்ட இடம் நெருங்க மோகனின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது.ஏழு நாட்களுக்குப் பிறகு கீர்த்திகாவை சந்திக்கப் போகும் மகிழ்ச்சி ஒரு புறமும் கோபமும் சேர்ந்து அவனை இனம் புரியாத ஒரு சூழ்நிலைக்கு இட்டுச் சென்றது.

காதலின் அதீத சக்தி இதுதானா ?

கீர்த்திகாவின் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி வண்டியை நிருத்தச்சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு முன்னே நடந்து சென்றவன் ஒரு கணம் திகைத்து நின்றான் ,

என்ன இது ?கீர்த்திகாவின் வீட்டு முன்பு நிறைய பேர் இருக்கிறார்கள்?

வேகமாக நடந்து சென்று பக்கத்தில் இருந்த ஒருவரிடம் விசாரித்தான் "வணக்கம் சார் ! என்ன விஷேசம் .இப்படி எல்லோரும் வந்திருக்கீங்க?

"ஆமா தம்பி நம்ம சொந்தக்காரப் பொண்ணு கீர்த்திகா இறந்திட்டாங்கா?"அந்த மனிசன் கவலை தோய்ந்த முகத்தோடு சொல்லி முடிப்பதற்குள் 

"கீர்த்திகா" என்று தன்னை அறியாமல் கத்திவிட்டான் .

அங்கு கூடியிருந்த அத்தனை ஜனங்களும் அவனைப் பார்க்க கீர்த்திகா என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடினான்.

அவனை தடுத்து நிறுத்திய ஒருவர் "தம்பி நீங்க யாரு ?கீர்த்திய உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?என்று கேட்டார் .

" ஒரே ஒருமுறை அவலப் பார்க்கணும் சார்?"என்று கெஞ்சினான் மோகன்.ஒரு கணம் தன்னை சுதாகரித்தவன் 

"ஆமா சார் நாம ஒன்றாக ஒரே இடத்தில்தான் வொர்க் பண்றோம் "என்று ஒரு பொய்யை சொன்னான் .

காதலை பற்றிச்  சொன்னால் அங்கிருப்பவர்களின் எண்ணத்தில் கீர்த்திகாவை பற்றிய தவறான ஒரு என்னம் உருவாகும் என்று நினைத்து தன்னோடு ஒரே இடத்தில வேலை பார்ப்பதாக ஒரு பொய்யை சொன்னான் .

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கீர்த்திகாவின் உடலுக்கு அருகில் சென்றான் .

மோகனின் கை கால்கள் நடுங்கியது .

நிற்கத் திராணியற்று விழுந்து விடுவோமோ என்ற நிலையிலும் 'தைரியமாய் இரு' என்ற கீர்த்திகாவின் வார்த்தைகள் அவனை உயிபெறச் செய்தது.

சிரித்த முகம் அப்படியே இருந்தது. அவனை திட்டும்போதுகூட  அவளுடைய முகத்தில் ஒரு புன்னகை தவழும் அதுவும் அப்படியே இருந்தது,

"சரி ஒரு முத்தம் கொடு என்று கடைசியாக சொன்ன  கீர்த்திகாவின் 
குரள் அவனுள் மீண்டும் மீண்டும் ஒலித்தது

"சார் கீர்திகாவுக்கு என்ன நடந்தது ?.நல்லாத்தானே இருந்தாங்க ?"படபடப்புடன் பக்கத்தில் இருந்தவரிடம் விசாரித்தான் .

"கீர்திகாவுக்கு ஏற்கனவே கான்சர் அறிகுறி இருந்துள்ளது .டாக்டர் அவளுக்கு எச்சரிக்கையும் செய்துள்ளார்.ஆனா அவ எதையும் கண்டு கொள்ளவில்லை .மருந்துகளும் பாவிப்பதில்லை. நேற்று திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தவ எழும்பவேயில்ல . இறந்திட்டா .பாவம் சின்ன வயசு .இப்படியாயிருச்சி."

'அடிப்பாவி எங்கிட்ட ஒரு வார்த்தையாவது   சொல்லியிருக்கலாமே .என் உசிரக்கொடுத்தாவது  உண்ணக் காப்பாத்தியிருப்பேனே? என்ன மட்டும் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டியே...கடைசியா சந்தித்தபோது 'தைரியமா இருன்னு' சொன்னாயே ..அது இதுக்கத்தானா?......

நீ இந்த உலகத்தவிட்டுப்போனாலும் அடுத்த ஜென்மம் வரைக்கும் என்னோடு நீ மட்டும்தான் இருப்பாய் .நீதான் என் மனைவி ...உன் கடைசி முத்தம்தான் என் வாழ்க்கை துணை ..இனியொரு பெண் என் வாழ்கையில் தேவையில்லை .கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க முட்டி மோதும் நெஞ்சு வலியுடன் வீதியில் நடந்தான் மோகன் 

==========
  

 


Post a Comment

Previous Post Next Post