உவைஸ் ரசான் அவர்களின் வழிகாட்டளில் கல்ஹின்னையில் மாபெரும் சிரமதானம்!

உவைஸ் ரசான் அவர்களின் வழிகாட்டளில் கல்ஹின்னையில் மாபெரும் சிரமதானம்!

நவம்பர் மாதம் 03,ம் திகதி  2022,ல் கல்ஹின்னை முற்சந்தி தொடக்கம் கல்ஹின்னை பிரதான பாதையில் காணப்படும் குப்பை கூலங்களை அகற்றி டெங்கு நுளம்புத்தொல்லைக
ளில் இருந்து  தடுக்கும் முகமாக பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் கல்ஹின்னை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அங்கத்துவரும் உறுப்பினருமான ஜனப் உவைஸ் ரசான் அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம் காலை 09:00, மணியளவில் ஆரம்பமானது.





இந்நிகழ்வில் பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், இப்பிரதேசத்தில் சுகாதார கண்காணிப்பு அதிகாரிகள் (P.H.I) அங்கும்புர பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் சிலர் அத்தோடு பூஜாப்பிட்டிய பிரதேச சபையில் இருக்கும் வீதி சுத்திகரிப்பு பணியாளர்கள் சகிதம் மிகச்சிறப்பாக நடைபெற்றன.
இச்சம்பவத்தின் போது கல்ஹின்னை பஜாரில் இருக்கும் கடை உரிமையாளர்கள் A.S.M ஸ்டோர்ஸ், கட்டுகஸ்தொட்ட ஹோட்டல், மாட்டிறைச்சி கடை, கோழிக் கடை,  மரக்கறிக் கடை உரிமையாளர்கள் மளிகைக்கடை உருமையாளர்கள் ஹரீஸ், அஜிமீர் போன்றவர்களும் தாங்களின் ஒத்துழைப்பை வழங்கினார்கள்.


குறிப்பாக: கடந்த பூஜாப்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஜனத்தா விமுக்தி பெரமுன கட்சி சார்பாக கல்ஹின்னை பிரதேசத்தில் போட்டியிட்ட ஜனாப் ஹகீம் பரித் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

இப்படிப்பட்ட போது நலச்சேவைகளில் எப்பொழுதும் சுயநலமற்ற கொள்கையுடன் சேவையாற்றும் உவைஷ் ரஷான் அவர்களுக்கு கல்ஹின்ன டுடே மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .

 நேரம் காலம் பாராது உழைக்கக் கூடியவர்கள் எமது சமூகத்திற்கும் ,ஊருக்கும் மிக மிக அவசியம் . 

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.

 

Post a Comment

Previous Post Next Post