மதிப்பிற்குரிய முஸ்லிம் ஹாஜியார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

மதிப்பிற்குரிய முஸ்லிம் ஹாஜியார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !


மதிப்பிற்குரிய முஸ்லிம் ஹாஜியார் அவர்களுக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது ஊரின் நலன் கருதி ஒரு முக்கிய விடயத்தினை Changing Galhinna குழுமம்/ Galhinna Today மின்னிதழ் மூலமும்  உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.`

எமது ஊரின் அபிவிருத்தி, மக்கள் நலன், பள்ளி நிர்வாகம், கல்வி அபிவிருத்தி போன்ற சகல துறைகளிலும் உங்களது பங்களிப்பு தவிர்க்க முடியாததாகவும், மறுக்க முடியாததாகவும் இருப்பதை ஊர் மக்கள் அனைவரும் அறிவர். நீங்களும் அதனை மறுக்க மாட்டீர்கள்.

அது உங்களது ஆளுமையினதும்,நல்ல எண்ணத்தினதும் விளைவே.

இனி வரும் காலங்களில் கூட உங்களது பணியும், ஈடுபாடும் எமது ஊரில் தவிர்க்க முடியாததாகவே உள்ளது என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

இந் நிலையில் தற்போது ஊரில் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவு செய்ய வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். இக் கட்டத்தில் அனைவரும் பொறுப்புடன் செயல்படா விட்டால் அதன் விளைவுகளை அனைவரும் அனுபவிக்க வேண்டி வரும். கடந்த காலங்களில் போலவே நிர்வாக சபை தெரிவு விடயத்தில் தங்களது பெயரும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டிருப்பதனை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.நீங்களும் மறுக்க மாட்டீர்கள். அது மட்டுமன்றி பள்ளி நிர்வாக தெரிவின் பின்னரும் உங்களது கரம் மறைமுகமாகவேனும் ஊர் நிர்வாக விடயங்களில் செல்வாக்கு செலுத்துவதை அனைவரும் அறிவர். எந்தவொரு நிர்வாக சபையும் உங்களை புறக்கணித்து ஊரில் எதனையும் செய்து விட முடியாது என்றொரு நிலைமை இருப்பதை கடந்த பல வருடங்களாகவே எமது ஊர் மக்கள் கண்டு வந்துள்ளனர். நீங்களும் அதனை மறுக்க மாட்டீர்கள். ஊரில் நல்லது நடந்தாலும், தீயது நடந்தாலும் உங்களது பெயரும் மற்றும் சிலரது பெயரும் தொடர்பு படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.

இந் நிலைமையில் தற்போதைய நிர்வாக சபை தெரிவிற்காக நான் அறிந்த வகையில் 50 இற்க்கு மேற்பட்டவர்கள் போட்டி இடுவதாக அறிகிறேன்.நிர்வாக சபை தெரிவு என்பது கேலிக் கூத்தல்ல.நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பொறுப்புக் கூற வேண்டிய மிக முக்கிய அமானிதம் என்பதை உணர்ந்தால் இவ்வாறான நிலமைகள் ஏற்பட மாட்டாது. தகுதி இல்லாதவர்கள் தெரிவு செய்யப்பட்டடால்
அதன் விளைவுகளுக்கு அனைவரும் பொறுப்பு கூற வேண்டும். ஏனைய முஸ்லிம் கிராமங்கள் கல்வி,பொருளாதாரம்,தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மிக நீண்ட தூரம் சென்று விட்டனர். பள்ளி நிர்வாக தெரிவு மிகப் பெரும் போராட்டமாக இருப்பது எமது ஊரில் மட்டுமே.

பள்ளி நிர்வாக தெரிவில் மிக மிக கடுமையான, உறுதியான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். தகுதியானவர்களை உள்ளடக்கிய ஒரு நிர்வாக சபை தெரிவு செய்யப்பட வில்லையானல் எமது ஊரின் சகல முன்னேற்றங்களும் முடங்கி விடும் ஆபத்து உள்ளது.

இத் தருணத்தில் உங்களைப் போன்றவர்கள் ஒன்றிணைந்து பொறுப்புடனும், தியாக சிந்தனையுடனும்செயல்பட்டால் எமது ஊரின் எதிர் காலத்தை நம்பிக்கையுடன் எதிர் நோக்கலாம்.

அதற்கு ஒரே வழி.... 
நீங்கள்...
நீங்கள் 
மட்டுமே தனி ஒருவராக நிர்வாகத்தைப் பொறுப்பேற்பது தான்.

மூன்று வருடத்திற்கு நீங்கள் உங்கள் தனிப்பட்ட வேலைப்பளு,மற்றும் தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைத்து ஒரு தியாகத்தை செய்வீர்களேயானால் உங்களது நேரடி நிர்வாகத்தில் ஒரு ஒளிமயமான கல்ஹின்னையை உருவாக்கலாம்.

இதற்கு ஊர்மக்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவும் மாட்டார்கள்.

அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஆளுமையும்,செயல்திறனும், செல்வாக்கும், அரசியல் மற்றும் அதிகாரங்களும் உங்களுக்கு ஏனையவர்களை விட அல்லாஹ்வின் அருளால் நிறைவாகவே உண்டு.

அத்துடன் ஒன்றியத்தின் தலைவர் ஜிப்ரி ஹாஜியாருடன் இணைந்து நீங்கள் செயல்படுவதால் அவரும் மற்றும் மூத்த முக்கியஸ்தர்களும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்கலாம்.

எனவே இக்கட்டான இத் தருணத்தில் எமது ஊரின் நலன் கருதி உறுதியான இம் முடிவை நீங்கள் எடுப்பீர்களாயின் அது ஒரு வரலாற்று திருப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவானாக.

எஸ்.எம்.இம்தியாஸ்
கல்ஹின்னை.


 


1 Comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அன்புக்குரிய இம்தியாஸ் நானா 06-01-2023. வெள்ளிக்கிழமை கல்ஹின்னை டுடேயில் உங்களின் அறிவுபூர்வமான ஓர் விடையத்தை வெளிப்படுத்தி இருந்தீர்கள் – மாஷா அல்லாஹ் (கற்றவன் கரையான் அல்ல) என்பதற்கு மிகப் பொருத்தமாக ஒரு விடையத்தை தொகுத்து எழுதியிருந்தீர்கள் M. முஸ்லிம் சலாஹுத்தீன் அவர்களிடம் அன்பானதோர் வேண்டுகோளாக. அல்ஹம்துலில்லாஹ்
    நான் அறிந்தொன்று 1988,ம் ஆண்டுகாலத்திலே இந்த ஊருக்காகவும் தன் சமூகத்திட்காகவும் சபையோர்கள் முன்னிலையில் அல்லாஹ்வை முன்னிறுத்தி ஒரு பொருமதிமிக்க வார்த்தை, வாக்குறுதி அளித்தவர்தான் முஸ்லிம் சலாஹுத்தீன் அவர்கள் என்பதை நான் ஆணித்தரமாகவும் இன்னும் பலர்களின் வாய்மூல சாட்சியாகவும் நிருபிக்க முடியும்.
    குறிப்பு: M.முஸ்லிம் சலாஹுத்தீன் அவர்கள் வாய்மொழின்த விடையம் இந்த ஊர் வாழும் வாழ்ந்துவரும் அனைவர்களுக்காவும் என் உயிர் இருக்கும் வரை இன்ஷா-அல்லாஹ் என்னிடம் வெறுமெனே ஒரு ரூபாய் பணமிருக்கும் வரையிலும் ஊருக்காக, ஊரின் நலன்களுக்காவும் என்றோர் வார்த்தையை சொன்ன ஒரேயொரு தனவந்தர் என்றால் இன்றுவரைக்கும் அந்த பெருமைக்குரியவர் M.முஸ்லிம் சலாஹுத்தீன் அவர்கள்தான் அல்ஹம்துலில்லாஹ். (WC)

    ReplyDelete
Previous Post Next Post