கையடக்கத் தொலைபேசியால் சீரழிந்த சிறுமி

கையடக்கத் தொலைபேசியால் சீரழிந்த சிறுமி

கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்து 14 வயது சிறுமியை ஏழு மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது பாடசாலை மாணவனை நவகமுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்


சிறுமி தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக தனது தாயிடம் கூறியதாகவும், சிறுமியை முல்லேரியா வைத்தியசாலையில் வைத்தியரிடம் சிகிச்சைக்காக அனுமதித்தாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் அதே பாடசாலையில் கல்வி கற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் பெற்றோர்கள் 27,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்த கையடக்கத் தொலைபேசி சில மாதங்களுக்கு முன்னர் குறித்த மாணவனுக்கு இணையவழி கல்விக்காக வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இணையத்தில் ஆபாச வீடியோக்களை பார்க்கும் மாணவனே அவ்வாறே சிறுமியுடன் இருந்துள்ளார் என சந்தேகமடைந்த மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செயலின் தீவிரம் குறித்து இருவருக்கும் சரியான புரிதல் இல்லை என்றும், இருவரிடமும் நடத்திய விசாரணையில் இது உறுதியானது என்றும் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டுக்கு வந்த சந்தேகத்திற்குரிய மாணவன் தனது கையடக்கத் தொலைபேசியில் கண்ட ஆபாச காட்சிகளின் பிரகாரம் நடந்துகொண்டமை தெரியவந்துள்ளது.

அவர்களின் நடத்தை இருந்தபோதிலும், இருவரிடமும் நீண்ட விசாரணையில் இருவருக்கும் இடையே காதல் இல்லை என்பதை காவல்துறையினர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 15 வயதுடைய மாணவன் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

Post a Comment

Previous Post Next Post