நான் என்கின்ற அகம்பாவம்!

நான் என்கின்ற அகம்பாவம்!


கடலில் வீழ்ந்தவன் கரை கண்டதும் 
தப்பிவிட்டேன் என்று தன்னலம் 
கொள்ளும் நீங்கள் தரையில்
மான்று போவது நிச்சயம் மகனே!


மறுமையை மறந்துவிட்டு சொர்க்கத்தின் 
திறவுகோல் வாங்க தன்னிடம்
கையிருப்பில் பணமிருப்பது மற்றும் 
போதுமென கனவுகானதே மகனே!


அள்ளி அள்ளித்தரும் இறைவன்
அதில் ஒரு பங்கு அடுத்தவருக்கும்
உறவுகளுக்கும் இருப்பதைக்
கொடுக்க மறந்து வாழ்ந்தால் 
உன் மனைவியின் கைபிடித்து 
சொர்க்கம் செல்ல முடியாது மகனே!


உறவு என்பது இரவு போன்று 
கருமையானது அல்ல நீ 
கதறியழும் காலம் உன் அருகில் 
உனக்காக கண்ணீர் வடிக்க 
உன் அருகில் யாரும் இருக்கார் மகனே!


கல்ஹின்னை டுடே galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post