ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் இருந்திருந்தால்.....!டெண்டுல்கர் கருத்து

ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் இருந்திருந்தால்.....!டெண்டுல்கர் கருத்து


நடந்து முடிந்த t20 இருதிப்போட்டியைப் பற்றிய கருத்துகளை முன்னாள் ஜாம்பவான்கள் கூறிவருகின்றனர். ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் அவரது 2 ஓவர்களை வீசியிருந்தால் இங்கிலாந்து அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்திருக்குமே தவிர, போட்டியின் முடிவில் மாற்றம் ஏதும் ஏற்பட்டிருக்காது. இங்கிலாந்துதான் ஜெயித்திருக்கும் என்று கவாஸ்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து டுவீட் செய்த சச்சின் டெண்டுல்கர், டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன்,  ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்றார். மேலும் இந்த உலக கோப்பை ரோலர் கோஸ்டர் போல அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.


 


Post a Comment

Previous Post Next Post