கல்ஹின்னை வாகன ஓட்டுனர்களின் கவனத்திற்கு!

கல்ஹின்னை வாகன ஓட்டுனர்களின் கவனத்திற்கு!


கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசலுக்கு அருகாமையில் இருக்கும் வீதியின் இந்த நிலைமையை எத்தனையோ (அரசியல்வாதிகள்) மக்கள் பிரதிநிதிகள் ஊரில் இருந்த போதும்கூட கவனிப்பாரற்று   நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளன,


எனவே அவ்வழியாக வாகன ஓட்டுனர்களின் கவனத்திற்காக கல்ஹின்னை டுடே மின்னிதழ் ஊடாக அறியத்தருகிறேன், விபத்துக்கள் நடந்த பிறகு நானா? நீயா? எனக் கதைத்துக் கொண்டு திரியாமல் வெள்ளம் வருமுன் அணைகட்டுவது போல் சிந்தித்து செயல் படவும்.

உரிய அதிகாரிகளைச் சந்தித்து அதற்கான திருத்த வேலையை பார்க்கவும் காலதாமதம் ஆனால் ஆபத்தானதொரு நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டிருக்கும் தெரிவிக்கின்றேன் .

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.

 


Post a Comment

Previous Post Next Post