கல்ஹின்னை யில் மீண்டும் ஒரு போராட்டமா?.... அம்பலமான ரகசியத் திட்டம் !

கல்ஹின்னை யில் மீண்டும் ஒரு போராட்டமா?.... அம்பலமான ரகசியத் திட்டம் !


பாத்திமா டீச்சருக்கு எதிராக நடாத்திய ஊர்வலம் போன்ற ஒன்றை கல்ஹின்னையில்  மீண்டும் நடாத்த திட்டம் போட்டு அலைகின்றது ஒரு கூட்டம் என்ற தகவல் கிடைக்கப் பெற்றன.பிரச்சினைகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அலைகின்ற இந்தக் குழவிக் கூட்டம் பணத்திற்கு அடிமையாக வாழ்கின்ற ஒரு கீழ்த்தரமான கூட்டம் என்று கல்ஹின்னை மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரகசியக்கூட்டங்கள் நடாத்தி ஊடகங்களுக்கு எதிராக செயல்பட நினைக்கின்ற இப்படிப்பட்ட கூட்டம் மக்களுக்கு எப்படி சேவை செய்வார்கள்?இவர்களுக்கு ஊர் பிளவு பட்டால்தான் உன்ன உணவு கிடைக்கும் என்ற நிலையில் வாழ்கின்றவர்கள்.


காலையில் எழுந்தவுடனே காற்சட்டை அணிந்து கொண்டு ஊருக்குள் உலாவி வருவதினால் இவர்கள் ஒன்றும் உயர்பீட பட்டதாரிகள் அல்ல, பதவி மோகத்தின் பங்காளிகள் என்பதேயாகும்.இவர்கள் எப்பொழுதும் மக்களிடையே பிரிவினையை உண்டுபண்ணி அதில் குளிர்காய நினைப்பவர்கள்.

படிப்பறிவில்லாத இந்த சில்லறைகள் பதவிக்காக எதை வேண்டுமென்றாலும் செய்யத் துணிவார்கள்.

பாத்திமா ஒழிக என்று கோஷம் போட்டவர்களில் அனேகம்பேர் இன்று உயிருடன் இல்லை என்றாலும் இந்த வீடியோவில் அவர்களைப் பார்க்கலாம்.இந்த பாத்திமா ஒழிக என்ற போராட்டம் கல்ஹின்னையின் ஒரு கருப்பு நாள் என்பதுதான் உண்மை .ஒரு பெண்ணுடன் சட்டபூர்வமாக போராட வக்கில்லாதவர்கள் கோஷம் போட்டு, அவமானப் படுத்தியது கல்ஹின்னைக்கு ஒரு அவமானம்தான்.

அனால் தோல்வி கண்டது அந்தப் பெண்ணில்லை ,கோஷம்போட்ட ரவுடிகள்தான் அவமானப் பட்டார்கள் ,அவமானப் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

அன்று ஒரு பெண்ணுக்கு எதிராக கல்ஹின்னை மக்களிடையே பகைமையை வளர்த்ததைப் போன்று இன்றும் ஒரு சிலர் செயல்படுகின்றார்கள்.பணத்திற்கு அடிமையாகி பைத்தியமாய் அலைகின்றார்கள். 


இன்று ஊடகங்களுக்கும் ,WHATSAPP குழுமங்களுக்கும் எதிராக போராட திட்டம் தீட்டுகின்றார்கள்.அதற்கு உலமாக்களை பயன்படுத்த திட்டம் தீட்டுகின்றதாக தகவல்கள் கிடத்தது.

உலமாக்களை ஊறுகாயைப் போன்று பயன்படுத்த நினைக்கின்றார்கள்.எடுத்ததற்கெல்லாம் உலமாக்களின் பெயரை பயன்படுத்தி பெயர் வாங்க நினைக்கின்றார்கள்.

குர்பானுக்கு நிய்யத்து வைத்து கத்தியை உலமாக்களிடம் கொடுத்து தொட்டுத் தரும்படி கேட்கும் அறிவுகெட்டவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

உலமாக்களை உங்கள் ரவுடித்தனத்திற்கு பாவிக்க நினைக்காதீர்கள் .உலமாக்களை மதித்து நடவுங்கள்.தவறான பாதைக்கு அவர்களை அழைப்பதே மிகப்பெரும் பாவம்.

நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் உலமாக்களை உங்கள் இஷ்டத்திற்கு வளைக்க முடியாது.அவர்களின் நம்பிக்கை (ஈமான் ) மிகவும் சக்தி வாய்ந்தது.கலவரங்களுக்கு துணை நிற்க மாட்டார்கள்..உண்மைக்கு புறம்பாக செயல்பட மாட்டார்கள்.  

ஆகவே ஊரில் ரவுடி ராஜ்யத்தை நிறுவ முயற்சிக்க வேண்டாம் .ஊடகங்களுக்கு எதிராக செயல்பட நினைக்கின்ற நீங்கள் வீழ்ந்து விடுவீர்கள்.

எம்.எம்.பாரூக்(WC)


 


Post a Comment

Previous Post Next Post