கல்ஹின்னை பிரதேசத்திற்குள் தென்னங்கன்று விநியோகம்!

கல்ஹின்னை பிரதேசத்திற்குள் தென்னங்கன்று விநியோகம்!


கொழும்பை சேர்ந்த தனவந்தர் அல்ஹாஜ் சித்தீக் (Hilru M. Siddeeque. (CHAIRMAN/ CEO- Citigardens)  அவர்களின் முயற்சியால்  நாடுமுழுவதும் 5 இலட்சம் தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 19-02-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கல்ஹின்னை பெரிய  பள்ளி பசார் மும்தாஜ் மஹால் மண்டபத்திற்கு முன்னால் GALHINNA BEEROOK MEDIA அமைப்பின் வேண்டுகோளின் பேரில் கல்ஹின்னை, சுற்றுவட்டார பிரதேசத்தில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு அவர்களின் தேவையை அடையாலம் கண்டு உரியவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில்அல்ஹாஜ் சித்தீக்,(Hilru M. Siddeeque. (CHAIRMAN/ CEO- Citigardens),GALHINNA BEEROOK MEDIA, கலேவெல (City Shoe Place) உரிமையாளர் அல்-ஹாஜ் மஸாஹிர், கல்ஹின்னை பொதுப்பணி சேவையாளரான ஜனாப் ஷிபான் ஹனிபா (JP) சமாதான நீதவான் போன்றவர்களால் மிகச் சிறப்பான முறையில் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக தென்னங்கன்று ஒன்றினை பள்ளியகொட்டுவ கிராம சேவகர் அல்-ஹாஜ் குலாம் (GS) அவர்களுக்கும்,அதனைத் தொடர்ந்து (SLMC) கட்சியின் ஆரம்ப அமைப்பாளரான அல்-ஹாஜ் S.M. பரீத் அவர்களுக்கும் வழங்கப்பட்டன,


மேலும் வேற்றுமதத்தைச் சார்ந்தவர்களுக்கும்  வழங்கப்பட்டன. 

கொரோனாவினால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட காலகட்டத்தில் கலேவெல (City Shoe Place) உரிமையாளர் அல்-ஹாஜ் மஸாஹிர் அவர்களும்,கல்ஹின்னை பொதுப்பணி சேவையாளரான ஜனாப் ஷிபான் ஹனிபா (JP) சமாதான நீதவான் அவர்களினாளும் பல தடவைகள் ஊருக்குத் தேவையான உதவிகளை,காலம் நேரம் பாராமல்.கட்சி பேதமின்றி செய்தார்கள்.

இன்றும் அதை தொடர்ந்துகொண்டிருப்பது மிகவும் பாராட்டப் படவேண்டிய ஒரு விடயம் 
தொடர்புகளுக்கு
JM.MAZAHIR ; 0770868020 
MHM SHIFAN ;0777939407 


M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post